Tuesday, July 23, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 103

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக் கூடிய அளவிற்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணம் என்றதுடன் நில்லாது, பொருள் உள்ளவரைப் புகழ்ந்து பேசுவதும்,இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும் இந்த உலகின் நடப்பு என்ற வள்ளுவர்..

அந்தப் பொருளை எதனுடன் ஒப்பிடுகிறார் தெரியுமா?

இருளை விலக்குவது விளக்கு.அதேபோல துன்பம் என்னும் இருளை விலக்குவது பொருள் என்கிறார்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று (753)

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்து விட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது

No comments: