Saturday, July 27, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 128

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும், இறந்து கிடப்பதற்கும் கூட வேறுபாடு கிடையாது எனும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்...

மறைந்திருந்து மதுவருந்தினாலும் அவன் கண்கள் சுழன்று மயங்கி காட்டிக் கொடுத்துவிடுமாம்.

மது அருந்துபவன், அவன் அதனை அருந்தா நேரத்தில், மது உண்ட ஒருவன் மது மயக்குவதில் தள்ளாடுவது கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாடுவதைக் கண்டப் பின்னராவது திருந்த வேண்டாமா? என்கிறார்.

கீழே சொல்லியுள்ல குறளில் அவரது ஒப்பீட்டினைப் பாருங்கள்..

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று (929)

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீரில் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு போவதும் ஒன்றுதான்..

அடடா...எப்படிப்பட்ட ஒப்பீடு..வள்ளுவருக்கின்றி வேறு யாருக்கு இப்படித் தோன்றும்..

No comments: