Saturday, July 27, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 123

உட்பகை எனும் அதிகாரத்தில் கீழே சொல்லப்பட்டுள்ள குறள்கள் ஒவ்வொன்றிலும் உட்பகையை எதனுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்

ஒரு இரும்புத் துண்டினை, அரம் கொண்டு தேய்க்கத் தேய்க்க அதன் உருவமும், வலிமையும் குறையுமாம்.அதுபோல உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து, குறைந்து விடும்

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி (888)

அடுத்து..

எள் சிறியது.அதனில் காணப்படும் முனையில் உள்ள பிளவு எவ்வளவு சிறியதாய் இருக்கும்.அதுபோல சிறிதாக உட்பகை இருந்தாலும், அதனால் பெருங்கேடு விளையுமாம்

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு (889)

எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்

அடுத்த குறளிலும் ஒப்பீடு தொடர்கிறது

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று (890)



உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

No comments: