Tuesday, July 23, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 104

பகைவர்களின் செருக்கை அழிக்கும் தகுதி பொருளுக்கே உண்டு.ஆகவேதான் பொருளை சேமிக்க வேண்டியுள்ளது.

அறம், பொருள்,இன்பம் ஆகியவை பொருந்தும் வழியில் பொருள் ஈட்டுபவர்களுக்கு, பொருள் மிகுதியாக சேர்வதோடு ஏனைய இரண்டும் எளிதாக வந்து சேரும்

அப்படி ஈட்டிய நம் கைப் பொருளை மட்டுமே நம்பி, பிறரிடம் கடன் வாங்காமல் தொழில் செய்வது என்பது எப்படி இருக்குமாம் தெரியுமா?

பெரிய பெரிய வணிகர்கள் தொழில் செய்யும் போது ,அவர்களுக்கு இடையே நாம் சிக்கிக் கொளள மாட்டோமாம்.
வள்ளுவர் சொல்கிறார்..யானைகள் ஒன்றொடொன்று போரிடும்போது, அதன் இடையே சிக்கிக் கொள்ளாமல், அந்தப் போரை குன்றின் மீது நின்று காண்பது போல எளிதானதாம்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை (758)

தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடு ஒன்று போரிடும்போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது


No comments: