பல உவமைகளை அருமையாக ஆங்காங்கே குறள்களில் ஒப்பீட்டு சொல்லியுள்ள வள்ளுவருக்கு ..எடுத்துக்காட்டாக சொல்ல முடியாத ஒன்று இருந்திருக்கிறது என் எண்ணுகையில் ஆச்சரியமே ஏற்படுகிறது..
அப்படி ஒப்பிட முடியாதது எதுவாய் இருக்கும்....
வறுமை என்னும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும் என்று சொன்னவர்..
வறுமைத் துன்பத்திற்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை என்கிறார் இக்குறளில்..
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது (1041)
இக்குறளில் வள்ளுவனின் சொல்விளையாட்டினையும் பாருங்கள்.
இன்மை, இன்னாதது,இன்மை,இன்மை,இன்னாதது....
வள்ளுவத்தைப் போற்றுவோம்
No comments:
Post a Comment