Sunday, July 7, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 74

அகமகிழ்ச்சியால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவைவிடத் தீய்மையானதாம்.

இப்படிப்பட்டவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் என்று பாருங்கள்..

பயத்தினால் நடுங்குபவர்களைச் சுற்றி பாதுகாப்பாக அரண் கட்டப்பட்டிருந்தாலும் , அதனால் எந்தப் பயனும் இல்லை.பயம் அவர்களை விட்டுப் போகாது.அதுபோல என்னதான் உயர் நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனும் இல்லையாம்

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு (534)

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்பான அரண் கட்டப்பட்டு இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை.அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனும் இல்லை.

No comments: