அன்பு, இரக்கம், கடமை தவறாமை ஆகியவற்றில் முதன்மையாய் இருப்போர்க்கு இந்த உலகமே உரிமையுடையதாக இருக்குமாம்
ஒருவருக்குக் கண் இருந்தும், அன்பும், இரக்கக் குணமும் இல்லாவிடில்..அவர்கள் மரங்களுக்கு ஒப்பானவர்களாம்
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைத்துகண் ணோடா தவர் (576)
ஒருவர்க்குக் கண் இருந்தும் கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும், இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவர் ஆவர்
இப்படிச் சொன்ன வள்ளுவர்..
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (577)
என்கிறார் அடுத்த குறளில்
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும். கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவர் என்கிறார்.
கருணை மனம் இல்லாதவரை கண்ணிருந்தும் இல்லாதவருடன் ஒப்பிடுகிறார்
இக்குறளில் வள்ளுவரின் சொல்விளையாட்டையும் ரசியுங்கள்
கண்ணோட்டம்,கண்ணிலர், கண்ணுடையார், கண்ணோட்டம்..
அடடா..வள்ளுவத்தைக் கொண்டாடுவோம்.
ஒருவருக்குக் கண் இருந்தும், அன்பும், இரக்கக் குணமும் இல்லாவிடில்..அவர்கள் மரங்களுக்கு ஒப்பானவர்களாம்
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைத்துகண் ணோடா தவர் (576)
ஒருவர்க்குக் கண் இருந்தும் கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும், இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவர் ஆவர்
இப்படிச் சொன்ன வள்ளுவர்..
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (577)
என்கிறார் அடுத்த குறளில்
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும். கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவர் என்கிறார்.
கருணை மனம் இல்லாதவரை கண்ணிருந்தும் இல்லாதவருடன் ஒப்பிடுகிறார்
இக்குறளில் வள்ளுவரின் சொல்விளையாட்டையும் ரசியுங்கள்
கண்ணோட்டம்,கண்ணிலர், கண்ணுடையார், கண்ணோட்டம்..
அடடா..வள்ளுவத்தைக் கொண்டாடுவோம்.
No comments:
Post a Comment