Monday, July 29, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும்- 141

உணவு, உடை,இருப்பிடம்  போன்றவை ஒரு மனிதனுக்கு பொதுவான தேவைகள்.ஆனால், சிறப்புக்குரிய தேவை, பிறரால் பழிக்கப்படும் செயல்களை தவிர்த்து வாழுதல்.

அப்படி ஏதேனும் தவறு இழைத்துவிட்டால் தமக்குள் வருந்துகின்ற நாணம் எனும் உணர்வு பெரியவர்களுக்கு அணிகலன் ஆகும்.அது இல்லாதவர்கள் என்னதான் பெருமித நடைப் போட்டாலும் அது ஒரு நோய்க்கு ஒப்பானதாகும்.

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை (1014)

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும்.அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும் அந்த நடை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்

No comments: