பல தொழில்களைச் செய்பவர்களைத் தாங்கிக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாலும் இவ்வுலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.அதனால் அனைவருக்கும் உணவு வழங்கும் உழவுத் தொழிலே சிறந்தது
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்.எனெனில் மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியுள்ளது. என்றெல்லாம் சொல்லும் வள்ளுவர் "உழவு" என அதற்கான தனி அதிகாரமே வைத்துள்ளார்
பல அரசுகளை தங்கள் குடைக்குள் கொண்டு வரும் வலிமைப் பெற்றவர்கள் உழவர்கள் ...ஒரு வண்டியை முழுதும் தாங்கி நிற்க வேண்டுமானால் அதற்கு அச்சாணி தேவை.அதுபோல மக்கள் பசியினைப் போக்கும்..உழவுத் தொழில் என்கிறார்.
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து (1032)
பல்வேறு தொழில் புரிகின்ற மக்கள் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்.எனெனில் மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியுள்ளது. என்றெல்லாம் சொல்லும் வள்ளுவர் "உழவு" என அதற்கான தனி அதிகாரமே வைத்துள்ளார்
பல அரசுகளை தங்கள் குடைக்குள் கொண்டு வரும் வலிமைப் பெற்றவர்கள் உழவர்கள் ...ஒரு வண்டியை முழுதும் தாங்கி நிற்க வேண்டுமானால் அதற்கு அச்சாணி தேவை.அதுபோல மக்கள் பசியினைப் போக்கும்..உழவுத் தொழில் என்கிறார்.
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து (1032)
பல்வேறு தொழில் புரிகின்ற மக்கள் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்
No comments:
Post a Comment