Sunday, July 28, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 135

பிறப்பினால் அனைவரும் சமம்.செய்யும் தொழிலில் காட்டுகின்ற திறமையினால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.

அதேபோல பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்.இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்.

தன்னிலை தவறாது ஒருவன் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்வானாயின், அவனுக்குப் புகழும்,பெருமையும் கிடைக்கும்.அப்படிப்பட்டவர் எதுபோல தெரியுமா?
கற்புக்கரசிகள் போலவாம்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு (974)

தன்னிலை தவராது ஒருவன் தன்னைத் தானே காத்துக் கொண்டு வாழ்வானாயின், அவனுக்கு கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும்,பெருமையும் கிடைக்கும்.

No comments: