Friday, July 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 92

ஒரு புதிய காரியத்தில் ஈடுபடுபவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை அறிந்து ஈடுபடவேண்டும்.

தவிர்த்து, முடிந்தால் அச்செயலின் தொடர்பாக மற்றும் ஏதேனும் செயலையும் முடித்துக் கொள்ள முடியுமா? என்றும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக நம்மைவிட வலிமை மிக்கவர்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என முழுமையாக உணர்ந்து செயல்பட்டால், அச்செயலில் வெற்றி காண்பதோடு.நாம் எதிர்க்கும் வலியார் நம் நட்பையும் பின்னர் தொடரக்கூடும்

இது எதுபோல என்றால்...ஒரு யானையைப் பிடிக்க மற்றொரு யானையை வைத்து பிடிப்பது போலவாம்.

வினையன் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும் 

No comments: