இரவும் பகலும் மாறி மாறி வருவது இயற்கை.ஆனால்,உலகம் எப்போதுமே இருட்டாகத்தான் இருக்குமாம்.யாருக்குத் தெரியுமா?
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள் (999)
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்குமாம்.
அதேபோன்று பண்பற்றவர்களின் செல்வமும் பயனற்றதாகிவிடுமாம்.எதுபோல என்று தெரியுமா?
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திருந் தற்று (1000)
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால்,அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகிவிடும்.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள் (999)
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்குமாம்.
அதேபோன்று பண்பற்றவர்களின் செல்வமும் பயனற்றதாகிவிடுமாம்.எதுபோல என்று தெரியுமா?
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திருந் தற்று (1000)
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால்,அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகிவிடும்.
No comments:
Post a Comment