Friday, July 26, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 120

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் ஒருவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்

இனிமையாய் தெரியும் நிழலும், நீரும்கூட கேடு விலைவிக்குமேயாயின் அது தீயவையாகக் கொள்ள வேண்டுமாம்.அதுபோலத்தானாம் உற்றார், உறவினரின் பகையுமாம்

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின் (881)

இனிமையாகத் தெரியும் நிழலும், நீரும்கூடக்கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அதுபோலவே உற்றார்,உறவினரின் உட்பகையும் ஆகும்.

No comments: