Sunday, July 28, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 130

சூதாட்டத்திற்கு அடிமை ஆகிவிட்டவர்களை விட்டு அவர்கள் ஈட்டிய புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை என அனைத்தும் அகன்று விடும்

ஒருவன் உடலுக்குத் துன்பம் வரவர, அவனுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை அதிகரித்துக் கொண்டிருக்குமாம் அதுபோலத்தான்..பொருளை இழக்க இழக்க..இழந்த பொருளைப் பிடிக்க வேண்டும் என சூதாட்ட ஆசை அதிகரிக்குமாம்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர் (940)

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகின்ற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர் மீது கொள்ளும் ஆசையும் ஒன்றேதான்

No comments: