Wednesday, July 24, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 111

உயிர் காப்பான் தோழன்

ஆபத்துக்கு உதவுவான் நண்பன் என்றெல்லாம் சொல்வார்கள்

ஆனால், அப்படிப்பட்ட நிலையில் நம்மைவிட்டு நீங்குபவன் நண்பனாக முடியாது.அப்படிப்பட்ட நண்பனை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்

ஒரு போர்க்களம்.குதிரைப் படை.ஒரு வீரன் குதிரையின் மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கின்றான்.அப்போது குதிரை அவனைக் கீழே தள்ளி விட்டு ஓடிவிடுகிறது.அதுபோன்ற நண்பர்களாம் அவர்கள்

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை (814)

போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும் 

No comments: