Sunday, July 21, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 94

ஒருவர் ஏதும் கூறாமலேயே அவர் என்ன நினைக்கின்றார் என்பதை அவரது முகக்குறிப்பால் உணராதவர் கண்கள் இருந்தும் இல்லாதவர் போலத்தான் என்னும் பொய்யாமொழியார்..அது போன்ற திறனையுடைவரை தெய்வத்திற்கே ஒப்பிடுகிறார்

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

என்கிறார்.

ஒருவனின் மனதில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறுவோமானால், அந்தத் திறமைப் படைத்த மனிதனையும் அத்தெய்வத்துடன் ஒப்பிடலாம்

No comments: