Tuesday, July 30, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 148

வறுமை எனும் துன்பத்திலிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் வரும்.

வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும்,வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது

வறுமையில் உள்ளவனுக்கு தூக்கம் இராது.

நெருப்புக்குள் கூட ஒரு மனிதனால் தூங்கிவிட முடியுமாம்..ஆனல் வறுமையில் இருக்கும்போது அவனால் தூங்க முடியாதாம்.

நெருப்பினும் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது (1049)

நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்.ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

No comments: