Wednesday, July 24, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 106

ஏதேனும் ஒரு துறையில் தனித்து விளங்குபவர்களுக்கு ஒரு செருக்கு இருக்கும்.
உதாரணமாக கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குபவனுக்கு இருக்கும் செருக்கை வித்யாகர்வம் என்பர்.

அதுபோல போர்க்களத்து வீரர்களுக்கும் ஒரு செருக்கு உண்டு.அதனால்தான் படைச்செருக்கு என்று ஒரு அதிகாரத்தை வள்ளுவர் வைத்திருக்கக் கூடும்.

தனக்கு நிகரான பகைவனுடன் போரிட வேண்டும்.அதை விடுத்து ஒரு கோழையுடன் போரிட்டு வெல்வதில் என்ன பெருமை இருக்கக் கூடும்?

இதைத்தான் இக்குறள் சொல்கிறது

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)

வலிமை மிக்க யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும் கூட அது,வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது  

No comments: