Monday, July 15, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 80

ஊக்கமுடையவர்களைத் தேர்ந்தெடுத்து, உயர்வு அவர்களிடம் போய்ச் சேரும்.

ஊக்கமுடையவர்களே எல்லாம் உடையவர்கள் ஆவார்கள். ஊக்கமில்லாமல், எல்லாம் உடையவர் ஆனாலும் அவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள்

இப்படியெல்லாம் சொன்ன வள்ளுவர்..அப்படி ஊக்கமுள்ளவர்களை எப்படி ஒப்பிடுகிறார் பாருங்கள்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

No comments: