Wednesday, July 31, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 150

இரந்து பொருள் பெறுபவர் இல்லையெனில், கொடுத்துப் புகழ் பெறும் வாய்ப்பு கொடுப்போருக்கு இல்லாமல் போகுமாம்.

அதேநேரம், ஒருவரிடம் யாசிக்கும்போது, அவர் இல்லையென்று சொல்லிவிட்டால் அவர் மீது கோபம் கொள்ளக்கூடாதாம் இரப்பவர்கள்.ஏனெனில், அவர்நிலையும் தன்னிலைப் போல இருக்கக் கூடும் என எண்ண வேண்டுமாம்

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி (1060)

இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது.தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக உள்ளதே!

No comments: