Wednesday, July 31, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 153

ஒருவர் உடுப்பதையும், உண்பதையும் கூட கண்டு பொறாமைப்படும் கயவன், அவர்கள் மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாய் இருப்பான்

தவிர்த்து, மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றை கேட்டவுடன் ஓடிச் சென்று பிறருக்கு எல்லாம் சொல்லிவிடுவான்.எப்படி தமுக்கு என்னும் கருவியை அடித்து தகவல் சொல்கிறார்களோ அப்படி அவன் தமுக்குப் போல என்கிறார்.

அறைபறை அன்னார் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான் (1076)

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களை தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

தவிர்த்து..மற்றொரு குறளில் சொல்கிறார்..

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ் (1078)

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்.ஆனால், கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதைப் போல, போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

No comments: