Friday, July 12, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 78

மழை..

இல்லையேல் உயிரினங்கள் இல்லை

மழை..பார்க்கப் பிடிக்கும்.அதை ஒரு கடவுளாக்கி, வருண பகவான் என வணங்குபவர்கள் நாம்

வள்ளுவர் மட்டும் விதி விலக்கா என்ன? தான் சொல்ல வரும் கருத்திற்காக பல குறள்களில் மழையை உடன் அழைக்கிறார்.மழைக்காகவே..முதல் அதிகாரத்திற்கு அடுத்து "வான் சிறப்பு" அதிகாரத்தை வைத்தவர் ஆயிற்றே!!

முறைதவறிச் செயல்படும் ஆட்சியில், நீரைத் தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெற இயலாது என்று சொல்பவர்..

அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் படும் தொல்லைகளை மழையில்லா உலகோடு ஒப்பிடுகிறார்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

மழையில்லாவிடில் துன்புறும் உலகத்தைப் போல அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

No comments: