Wednesday, July 24, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் -112

சிரித்து, சிரித்துப் பேசி நம்மை சீரழிக்க நினைக்கும் வஞ்சகர்களின் நட்பை அஞ்சி விலகிட வேண்டும்

மனதார இருக்கும் நட்பே சிறந்த நட்பாக இருக்கும்.

நம்மை சந்திக்கும் போது  இனிமையாக பேசிவிட்டு, நமக்குப் பின்னால் பழித்து பேசுபவரின் நட்பை உணர்ந்து நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்

மனாதரப் பழகாது, வெளியே நண்பன் போல பழகுபவர் எப்படிப்பட்டவர்களாம் தெரியுமா?

இரும்பைத் துண்டாக்கத் தாங்குப்பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பானவர்களாம்

சீரிடங் கானின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு (821)

மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாகக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்

என்ன ஒரு ஒப்பீடு.
 ("பட்டடைக் கல்" கொல்லன் உலைக்களத்தில், சம்மட்டி  வலுவாக, எத்தனை முறை தாக்கினும் நிலை குலைந்து போகாது பட்டடைக் கல்)

No comments: