Sunday, July 28, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 129

எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும், அந்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஈடுபட்டு, முயன்று வெற்றிக்கனியினைப் பறிக்க வேண்டும்.

ஆனால்...ஒரு இடத்தில் மட்டும் வெற்றி நிச்சயம் என்ற போதிலும் அங்கு செல்லக் கூடாது.அந்த காரியத்தில் ஈடுபடவும் கூடாது.

அது என்ன? அப்படிப்பட்ட காரியத்தை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்...பார்ப்போம்.

வெற்றி பெறுவதாயினும் சூதாடும் இடம் செல்லக்கூடாதாம்.அந்த வெற்றி, தூண்டிலில் இரையை விழுங்குவதாக எண்ணி மீன்கள் தூண்டில் முள்ளில் மாட்டிக் கொள்வது போலவாம்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று (931)

வெற்றியே பெறுவதாக ஆனாலும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது.அந்த வெற்றி தூண்டிலின் முள்ளில் கோர்த்த இரையை மட்டும் விழுங்குவதாக எண்ணி மீன்கள் தூண்டில் முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.

No comments: