Wednesday, July 31, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 149

இருப்பதைக் கொடுக்க மனமில்லாமல், மறைத்திடும் குணம் இழிநிலை ஆகும்.

இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் இரப்போருக்கு வழங்கிடும் குணம் உடையவர்களைக் காணும்போது இரப்போர் உள்ளம் மகிழும்

அப்படியின்றி..யாசிப்பவர்கள் தங்களை நெருங்கக் கூடாது என்று எண்ணும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பொம்மைகள் போன்றவர்களாம்

இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்ரு (1058)

வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள் தம்மை நெருங்கக் கூடாது என்கின்ற மனிதர்களுக்கும்.,மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை

No comments: