Sunday, July 21, 2019

வள்லுவனும்..ஒப்பீடுகளும் - 99

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்கள் உள்ள அவையில் பேசுவது எப்படிப்பட்டது என ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒரு பாத்திரத்தில் வீட்டிற்குள் பால் எடுத்துச் செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது வீட்டின் முற்றத்தைக் கடக்கும் போது பாலின் பெரும்பகுதி சிந்திவிடுகிறது.
முற்றம் தூய்மையாக இருந்தாலாவது பரவாயில்லை..ஆனால் சுற்றிலும் தூய்மையற்ற முற்றம்.அப்படிப்பட்ட நிலையில்..சிந்திய பால் முழுதும் வீணாகிவிடுமாம்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல் (720)

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையற்ற முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல வீணாகிவிடும்

No comments: