Wednesday, July 17, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 84

ஊக்கம் என்ற உயர்ந்த பண்பு உள்ளவர்களிடம், பிறருக்கு உதவி செய்யும் பெருமித உணர்வும் இருக்குமாம்.

ஊக்கமற்றவர்கள் நம்முடன் வைத்திருப்பது எதுபோல என வள்ளுவர் சொல்கிறார் தெரியுமா?

எதிரே பகைவர்.ஒரு கோழை கையில் வாளினை வைத்து, அந்த எதிரிக்கு பயந்து கண்டமேனிக்கு சுழற்றுகிறானாம் அவ்வாளினை.

அந்தக் கோழைக்கு ஒப்பாவார்களாம்  நம்முடன் உள்ள ஊக்கமில்லாதவர்கள்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் (614)

இப்படிச் சொல்லும் வள்ளுவர் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் தூணுக்கு ஒருவரை ஒப்பிடுகிறார்.அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் (615)

தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார்,நண்பர்கள்,நாட்டு மக்கள் ஆகிய் அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

No comments: