Sunday, July 28, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 131

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள் .

பலகொடிப் பொருள்களை வழங்கினாலும், சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

இப்படிப்பட்ட குடியினரின் சிறந்த குறைகள் ஒளிவு மறைவு மின்றித் தெரியும்..எதுபோல எனில்..

வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியுமாம்

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (957)

பிறந்த குடிக்கு பெருமை சேர்ப்பவர்களின் சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகும்.

No comments: