Thursday, July 18, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 87

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்து அதற்கேற்ப செயல்களை அரசாட்சியில் உள்ளவர்கள் செய்திடல் வேண்டும்

இதில் அமைச்சர்கள் பங்கு முக்கியமானது.அவர்கள் தான் துணிச்சலுடன் நல்ல யோசனைகளைக் கூறி அரசை வழி நடத்திட வேண்டும்

அப்படியின்றி, தவறாக சிந்தித்து செயல்படும் அமைச்சர் இருந்திட்டால், அந்த அரசுக்கு எழுபதுகோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பதைவிட கேடு நிரம்பியதாய் அமையுமாம்

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் (639)

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகில் இருப்பதைவிட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்

No comments: