Tuesday, July 16, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 82

ஒருவரின் உருவத்தை வைத்து அவர் வீரமானவரா,கோழையா என்பதைத் தீர்மானித்துவிட முடியாது.

உருவத்தைவிட ஊக்கமே வலிமையானது.மனதில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் மரத்துக்கு ஒப்பாவார்களாம்.

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு (600)

மனதில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை

இப்படிச் சொன்ன வள்ளுவர் இதற்கு முந்தைய குறளில் என்ன சொல்கிறார்..ஊக்கமில்லாதவரை யாருடன் ஒப்பிடுகிறார் எனப் பார்ப்போம்..

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் (599)

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவதுதான்.

No comments: