Friday, July 26, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 121

நெருங்கிய உறவினர்களுக்கு இடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடுவிளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்குமாம்

ஆகவே, உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்தக் கொள்ள வேண்டும்.இல்லையெனில், பச்சை மண்பாண்டம் உருவாகும் போது அதை உருளையிலிருந்து குயவன் அறுத்து எடுக்கும் கருவி போல உட்பகை அழிவு செய்து விடுமாம்.அடடா...என்ன ஒரு ஒப்பீடு..

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும் (883)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிடின், சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்

No comments: