Wednesday, July 31, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 154

அறம், பொரு ள் இரண்டிலும் வள்ளுவனின் உவமைகளின் உலாவினையும், ஒப்பீடுகளையும் பார்த்தோம்..இனி.."இன்பத்துப் பாலில்"இருந்து.

இதில், பல வர்ணனைகளும், உவமைகளும் நம்மை வியக்க வைக்கின்றன.அவற்றில் சிலவற்றை இனிப் பார்ப்போம்.

வாட்டும், அழகு, வண்ண மயில் என மங்கையை வர்ணிப்பவர் அவளைக் கண்டு நெஞ்சம் மயங்குகிறது என் கிறார்.

அவளது பார்வை, ஒரு தானையுடன் வந்து தாக்குவது போல இருக்கிறதாம்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)

அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க,அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதா தென்று ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

அடுத்த குறளில்..

கூற்றுவன் என்னும் எமனை எனக்கு முன்பெல்லாம் தெரியாது.இப்போது தெரிந்து கொண்டேன்.அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடைவன் என்ற உண்மையை

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

பெண்ணின் விழி உயிரை எடுக்கிறதாம்

No comments: