Sunday, July 28, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 134

தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்..

சாகாமலே இருக்க மருந்து கிடையாது.அப்படி இருக்கையில் உயிரை விட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டிற்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்

என்றெல்லாம் சொன்ன வள்ளுவர், மானத்தை இழந்தால் உயர்ந்த மனிதர்கள் என்ன செய்வார்கள்  என சொல்லி, அதை யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (969)

என்கிறார்.

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் கவரிமான் உயிர் வாழாது என்பர்..அதுபோல மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டுவிடுவார்கள். 

No comments: