Tuesday, July 30, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 147

அரிய பலநூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகுமாம்

அப்படிப்பட்ட வறியவர், வறுமை வந்துவிட்டது என்பதற்காக அறநெறியிலிருந்து விலகி நடக்கக் கூடாதாம்.அப்படி நடப்பானாகில் அவன் தாய் கூட அவனை அயலானைப் போலத்தான் கருதுவாளாம்

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் (1047)

வறியவன், காலை விடிந்ததும் இன்றைக்கு, நேற்று போல வராமல் இருக்க வேண்டுமே என எண்ணுவானாம்.அப்படி என்ன முதல்நாள் வந்தது? வறுமை...

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு (1048)

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என வறியவன் ஏங்குவான்

.

No comments: