Sunday, July 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 97

காய்களில் விதைகளும், பழங்களில் கொட்டையும்
அவற்றின் உள்ளேயே இருக்கும்.

இதற்கு விதிவிலக்கு..முந்திரிப் பழம்.

இப்பழத்தின் கொட்டை பழத்தின் வெளியேவே இருக்கும்.

ஆகவேதான்..எந்த ஒரு பிரச்னை அல்லது வேலைக்கு, யாரும் கேட்குமுன்னே தன் கருத்துகளை கூறுபவர்களை முந்திரிக் கொட்டை என்பர்.

தனது வள்ளுவத்தில் ஒப்பீட்டில் முந்திரிக் கொட்டையினைக் கூட வள்ளுவர் விட்டு வைக்கவில்லை.

அதனை எதனுடன் ஒப்பீடுகிறார் பாருங்கள்..

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு (715)

அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக்கொட்டை போல பேசாமல் இருக்கும் அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்



No comments: