உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், தனக்குப் புகழ் வேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபட மாட்டார்கள்
உயர் நிலை வருகையில் அடக்க உணர்வும், அந்நிலை மாறிடில் யாருக்கும் அடிமையாகா மான உணர்வும் அவர்களுக்கு உண்டு
மக்களின் உள்ளத்தில் அப்படி உயர் இடம் பெற்றஒருவர் மானம் இழந்து, தாழ்ந்திட்டால்..அவர்கள் தலையில் இருந்து உதிர்ந்த மயிருக்கு சமமானவராகக் கருதப்படுவர்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை (964)
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும் போது தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்கு சமமாகக் கருதப்படுவார்கள்
அடுத்த குறளிலேயே சொல்கிறார்...
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (965)
வள்ளுவரின் சொல் விளையாட்டினைப் பாருங்கள்
ஒன்றரை அடியில்...குன்றின்,குன்றுவர்,குன்றுவ,குன்றி அடடா..
இக்குறளுக்கானப் பொருள்
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்
உயர் நிலை வருகையில் அடக்க உணர்வும், அந்நிலை மாறிடில் யாருக்கும் அடிமையாகா மான உணர்வும் அவர்களுக்கு உண்டு
மக்களின் உள்ளத்தில் அப்படி உயர் இடம் பெற்றஒருவர் மானம் இழந்து, தாழ்ந்திட்டால்..அவர்கள் தலையில் இருந்து உதிர்ந்த மயிருக்கு சமமானவராகக் கருதப்படுவர்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை (964)
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும் போது தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்கு சமமாகக் கருதப்படுவார்கள்
அடுத்த குறளிலேயே சொல்கிறார்...
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (965)
வள்ளுவரின் சொல் விளையாட்டினைப் பாருங்கள்
ஒன்றரை அடியில்...குன்றின்,குன்றுவர்,குன்றுவ,குன்றி அடடா..
இக்குறளுக்கானப் பொருள்
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்
No comments:
Post a Comment