Friday, July 26, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 117

நக்கல், நையாண்டி புரிவதை கூட வள்ளுவர் விட்டு வைக்கவில்லை.அதற்கு பல குறள்களை உதாரணமாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தேவரனையர் கயவர்...என கயவர்களை தேவருடன் ஒப்பிடுவார்.இந்த ஒப்பீடு பின்னால் வருகிறது .அதேபோல

பிரிதினிது பேதையர் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில் (839)

என்ற குறளில் 'அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது" என்று சொல்லிவிட்டு, "ஏனெனில் அவர்களை பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை" என நக்கல் செய்கிறார்.

சரி, இப்போது ஒப்பீடுக்கு வருவோம்..

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது எதுபோலவாம் தெரியுமா? வெளியே சென்று திரும்புகையில் ஏதோ அசுத்தத்தை மிதித்து விட்டு வந்து காலைக் கழுவாமலேயே படுக்கச் செல்வது போல என்கிறார்.

கூழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்  (840)

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலை படுக்கையில் வைப்பது போன்றது

No comments: