Wednesday, July 24, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 105

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பயமற்ற உறுதி உடையதும் தான் ஒரு அரசுக்கு சிறந்த படையாகக் கருதப்படும்.மேலும், அப்படையில் உள்ள வீரர்களே திறம் வாய்ந்த வீரர்களாகவும் மதிக்கப்படுவர்.இதுபோல வீரர்கள் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துவிடுவார்கள்.

இப்படிப்பட்ட வீரர்களையும், வீணர்களையும் எதனுடன் ஒப்பிடுகிறார் பார்ப்போம்.

எலிகள் கூட்டம் கூட்டமாக..பார்க்க பெருங்கடல் போல தோற்றம் அளித்தாலும், அவை ஒரு நாகத்தின் மூச்சுக் காற்றுக்கு முன்னால் நிற்கமுடியாது..அதுபோலத்தான் இவ்வீரர்கள் முன் வீணர்கள் என்கிறார்.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் (763)

எலிகள் கூடி கடல்போல முழங்கிப் பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்கமுடியுமா?அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துவிடுவார்கள்


No comments: