Thursday, July 25, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 115

சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.

அவர்கள், கண்ணீர் விட்டு அழுதிடும்போது கூட அவர்கள் மனதில் சதிச்செயலே நிறந்திருக்குமாம்.இது எதுபோல என சொல்கிறார் தெரியுமா?

பகைவர்கள் வணங்கும்போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கான கருவி மறைந்திருப்பது போலவாம்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து (828)

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக் கருவி மறைந்திருப்பது போல, அவர்கள் கண்ணீர் விட்டு அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்

No comments: