Wednesday, July 31, 2019

வள்ளுவரும் ஒப்பிடுகளும் - 152

குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார்.ஆனால் நல்லவராகக் காட்டிக் கொள்வார்.எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களை விட , எதைப் பற்றியும் கவலைப்படாத கயவர்கள் பாக்கியசாலியாம்.என்ன ஒரு நையாண்டி இந்த வள்ளுவருக்கு.

நன்னறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர் (1072)

எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட ,எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் கயவர்கள் பாக்கியசாலிகளாம்.

இப்படிச் சொல்லும் வள்ளுவர் கயவர்களை, தேவர்களுடன் ஒப்பிடுகிறார்.

புராணங்களில் வரும் தேவர்களைப் போல மனம் விரும்பியதையெல்லாம் கயவர்களும் செய்வார்களாம்

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் (1073)

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால்..இருவரையும் சமமாகக் கருதலாம்

No comments: