Friday, July 5, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 72

அந்த  அழகிய கிராமத்தில் ஒரு குளம்...ஆனால்..அக்குளத்தின் நீரால் எந்தப்பயனும் இல்லையாம்.காரணம் அக்குளத்திற்குக் கரையில்லை.ஆகவே அது பொதுமக்களுக்கு பயன்படாமல்..மாசுபட்டு..நீரின் தன்மையே பாதிக்கபப்ட்டு விட்டதாம்

அதுபோல என வள்ளுவர் எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்....



உற்றார், உறவினருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கையை.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.என்பதை உணர்ந்து..சிறு மனக்கசப்புகளை தள்ளிவிட்டு, அவர்களுடன்   மகிழ்ந்து பழக வேண்டுமாம்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று  (523)

உற்றார், உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனின் வாழ்க்கையானது, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததுப் போலப் பயனற்றதாகிவிடும்  

No comments: