Tuesday, July 16, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 81

நாம் எண்ணுவதெல்லாம் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்க வேண்டும்.அது கை கூடாவிடினும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது

ஒரு போர் நடக்கிறது என்றால் யானைப்படையில் ,யானை ஒன்று தன் உடல் முழுதும் அம்புகள் துளைக்கப்பட்ட நிலையிலும், கடைசிவரை உறுதியாய் இருக்கும்.அதுபோல ஊக்கமுடையவர்கள், தாங்கள் அழியப்போவது நிச்ச்யம் என்ற நிலை வந்தபோதும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு (597)

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்

No comments: