Monday, July 22, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 101

ஒரு அவையில் பேசும்போது, பவித குறுக்கீடுகள் இருக்கும்.அதற்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் அனைத்தையும் திறம்படக் கற்றிருக்க வேண்டும்.

ஆனால், அவையில் பேச அஞ்சுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் ஆவார்கள் தெரியுமா?

ஒரு கோழை..கையில் வாளுடன்.அவனைச் சுற்றி பகைவர்கள்.ஆனால் பயந்த சுபாவம் உள்ள அவனிடம் வாளிருந்து என்ன பயன்? அதைச் சுற்ற பயம்.

அப்படிப்பட்டவர்களாம் அவைக்கு அஞ்சுபவர்கள்.

வாளொடென் வங்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு (726)

கோழைகளுக்கு கையில் வாள் இருந்தும் பயனில்லை.அதுபோலஅவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல்கள் கற்றும் பயனில்லை

அவை அஞ்சாமை என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது.இதற்கு அடுத்த குறளிலும் இக்கருத்தினை உறுதிப் படுத்துகிறார்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல் (727)

என்கிறார்.

அவை நடுவில் பேசப் பயப்படுகின்றவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்

No comments: