Monday, July 22, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 100

அறிவுடையோர் சபையில், தான் சொல்லப்போவது சரியானது என்று அறிந்தாலும், அதைச் சொல்ல அஞ்சுவர்பலர்.அப்படி அஞ்சாமல் பேசுபவர்கள் ஒரு சிலரேவாம்.அவர்களை யாருடன் ஒப்பிடுகிறார் தெரியுமா...

போர்க்களம்....சுற்றிலும் பகைவர்கள்.நம்மை அழிக்கத் தயாராய் உள்ளனர்.வாழ்வா...சாவா..போராட்டம்.அதுபோன்ற நிலையில் கோழைக்கும் வீரம் வரும்.சாவுக்கு அஞ்சாமல் பகைவருடன் போராடுவர்.அப்போது அச்செயல் அவர்களுக்கு எளிதாய்த் தோன்றும்.ஆனால் அப்படிப்பட்டவர்கள்அறிவுடையோர் நிறைந்த சபையில் அஞ்சாமல் பேச பயப்படுவார்களாம் .மிகச்சிலரே விதிவிலக்காய் பேசுபவர்களாம்.

சுருங்கச் சொன்னால் உயிர் போராட்டத்தையே எளிய செயல் என எண்ணுபவர்கள், அறிவுடையோர் முன் பேசுவதை கடினமாய் எண்ணுவார்களாம்.

பகையத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர் (723)

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல்.(ஆனால்) அறிவுடையோர் நிறைந்த சபையில் சிலரே அஞ்சாமல் பேசக்கூடியவர்கள்.

இதில் ஒப்பீடு இல்லையென்றாலும்.. போருக்கு போகும் துணிவைவிட,அவையில் பேசுவது கடினம் என அவையும்..போரையும் சொல்வதால் இக்குறளையும் இங்கு எழுதியுள்ளேன்


No comments: