Sunday, July 28, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 132

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும்,எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும்..அவர் நலத்தையும், அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.

அவர்களின் வாய்ச் சொலலைக் கேட்டே   அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என அறியலாம்..எப்படி..விளைந்த பயிரினைப் பார்த்ததும் அப்பயிர் எந்த நிலத்தில் விளைந்தது என்பதை அறிந்து கொள்கிறோமோ அதுபோல.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் (959)

விளைந்த பயிரைப் பார்த்தாலே, அது எந்த நிலத்தில் விளைந்தது என அறிந்து கொள்ளலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்

No comments: