Tuesday, July 2, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 69

எந்த ஒரு காரியம் செய்து முடிக்க வேண்டும் என்றாலும், அதற்குண்டான காலம் வாய்க்கும் போது அதை பயன்படுத்திக் கொண்டு, செயற்கரிய அக்காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

நாம் கிராமப்புறங்களில் அல்லது ஏரி, குளக்கரைகளில் பார்த்திருப்போம்.கொக்குகள் ஒற்றைக்காலில் நீரில் நின்றுக் கொண்டிருக்கும்.சமயம் வரும்போது மீனை உடன் குத்திக் கொள்ளும்.அதேபோல, அக்கொக்கு குறி தவறாமல் குத்துவது போல காலம் வருகையில் நாம் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து  (490)

காலம் கைகூடும் வரையில் கொக்கு போல பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல செய்து முடிக்க வேண்டும். 

No comments: