Saturday, July 27, 2019

வள்லுவனும்..ஒப்பீடுகளும் - 122

ஒன்றாக இருந்தவர்களுடன் உட்பகை தோன்றி விடுமானால், அதனால் எற்படும் அழிவினைத் தடுப்பது என்பது அரிதான செயலாகும்.

செப்பு எனப்படுகின்ற சிமிழின் மூடி அதனுடன் பொருந்தியிருப்பது போலவே கண்களுக்குத் தோன்றினாலும்  உண்மையில் சரியாய் பொருந்தி இருக்காது.அதுபோல உளமார பொருந்தியிருப்பதுப் போலத் தோற்றமளித்தாலும் உட்பகை உள்ளவர்கள் பொருந்தியிருக்க மாட்டார்களாம்.

செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி (887)

செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்திற்கு மட்டுமே தெரியும்.அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள் 

No comments: