Thursday, July 11, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 76

ஒரு நாட்டில் சமூகவிரோதிகள் இருந்தால், அவர்களைக் கண்டறிந்து தண்டனையளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்

இது எது போல என்றால்...

வள்ளுவர் சொல்கிறார்..

ஒரு நிலத்தில் பயிர் பச்சை பசேல் என செழிப்பாக வளருகிறது.ஆனால்..வயலின் நடுவே..நடுவே களை வேறு.
இது பயிரின் வளர்ச்சியினைத் தடுக்கக் கூடும்.ஆகவே களை எடுக்க வேண்டியது அவசியம்.அதுபோலவாம் சமூக விரோதிகள்.நாடு செழிப்பாக இருக்க, மக்களை காக்க சமூக விரோதிகளை களையெடுக்க வேண்டும்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்  (550)

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்

No comments: