குடிமக்களை அரவணைத்து செல்லும் நல்லரசை நாடே போற்றும்.
குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், அந்த நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும்.இது எப்படி என்றால்..உலகில் வாழும் உயிர்கள் வாழ மழை தேவைப்படுவது போல வாம்
வானோக்கி வாழும் உலகெல்லா, மன்னவன்
கோனோக்கி வாழும் குடி (542)
உலகில் வாழும் உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவதைப் போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது
இது செங்கோன்மை அதிகாரத்தில் வரும் குறள்.இதே அதிகாரத்தில் அரசுடன் மீண்டும் மழையை ஒப்பிடுகிறார் வள்ளுவர்
பருவகாலத்தில் தவறாது மழை பெய்தால் எப்படி வளமான விளைச்சல் இருக்குமோ, அதுபோல நீதி வழுவாமல் ஒரு அரசு இருந்தால் சிறப்பாக இருக்குமாம்
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (545)
நீதி வழுவாமல் ஒரு அரசு நாட்டில் இருக்குமேயாயின் அது, பருவ காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைக்கும் நாட்டிற்கு ஒப்பானதாம்
குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், அந்த நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும்.இது எப்படி என்றால்..உலகில் வாழும் உயிர்கள் வாழ மழை தேவைப்படுவது போல வாம்
வானோக்கி வாழும் உலகெல்லா, மன்னவன்
கோனோக்கி வாழும் குடி (542)
உலகில் வாழும் உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவதைப் போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது
இது செங்கோன்மை அதிகாரத்தில் வரும் குறள்.இதே அதிகாரத்தில் அரசுடன் மீண்டும் மழையை ஒப்பிடுகிறார் வள்ளுவர்
பருவகாலத்தில் தவறாது மழை பெய்தால் எப்படி வளமான விளைச்சல் இருக்குமோ, அதுபோல நீதி வழுவாமல் ஒரு அரசு இருந்தால் சிறப்பாக இருக்குமாம்
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (545)
நீதி வழுவாமல் ஒரு அரசு நாட்டில் இருக்குமேயாயின் அது, பருவ காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைக்கும் நாட்டிற்கு ஒப்பானதாம்
No comments:
Post a Comment