Thursday, August 1, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகலும் - 156

காதலியின் மைதீட்டிய கண்களில் பார்வை இரண்டு வகையாய் இருக்குமாம்.ஒன்று காதல் நோயைத் தருமாம்..மற்றது அந்நோய்க்கு மருந்தளிக்குமாம்

மேலும் அவளது அன்பை பயிருக்கு ஒப்பிடுகிறார்.அவளது அன்பென்னும் பயிருக்கு..அவளது கடைக்கண் பார்வை நீராக பாயுமாம்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர் (1093)

கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது.அந்தச் செயல் அவள் என் மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக அமைந்தது.

மேலும் சொல்கிறார் காதலர்க்கு ஒரு இயல்பு உண்டு.அதாவது அவர்கள் பொது இடத்தில் ஒருவருக்கொருவர் தெரியாதது போல நடந்து கொள்வார்களாம்.

No comments: